கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். பல உச்சநட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் டைரக்டர் வெங்கட்பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி விஜய் தொடர்பாக பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல் வைரலாக பரவி வருகிறது.

விகடன் விருது நிகழ்ச்சியில் சிம்புவின் நடிப்பில் ரிலீஸ் ஆகிய மாநாடு படத்திற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. அப்போது நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பேசியதாவது, மாநாடு படத்தை பார்த்து திரைபிரபலங்கள் பலரும் பாராட்டப்பட்டனர். அதேபோன்று நடிகர் விஜய்யும் படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டினார். இந்த யோசனையை நீங்கள் எப்படி படமாக்கினீர்கள் என கூறி அவர் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அத்தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது