தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 29-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

அதோடு மாமன்னன் படம் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது, ரசிகர் ஒருவர் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தார். அந்த நேரத்தில் நான் வீட்டில் இல்லை.

இந்நிலையில் அவர் வீட்டில் வேலை பார்ப்பவரிடம், என் கணவராக பாவித்து “கீர்த்தி சுரேஷ் ஏன் உதயநிதியுடன் நடித்தார்?” என கேட்டார். இவ்விஷயத்தை நான் உதயநிதியிடம் சொல்லிவிட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்..