சீரியல் நடிகை ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது கணவர் தினேஷ் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இவர்கள் பிரிந்து வாழும் சூழலில், தினேஷ் ரச்சிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது என சொல்லப்பட்டது. எனினும் அது நடக்கவில்லை.

இதனிடையே ரச்சிதா தான் குழந்தையை தத்தெடுக்க போவதாக மறைமுகமாக கூறியிருந்தார். இதனால் அவர்கள் விவாகரத்து பெறுவது உறுதி என்றே கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரச்சிதா போலீசில் தினேஷ் மீது புகாரளித்துள்ளார். அதாவது, தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என்று புகாரளித்திருக்கிறார்.

இந்நிலையில் தினேஷ் கூறியிருப்பதாவது “நாங்கள் இரண்டு பேரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். 2 வருடமாக அவரிடம் சமாதானம் ஆகி விடலாம் என பலமுறை மெசேஜ் அனுப்பி இருக்கிறேன். எனினும் அவற்றில் ஒன்றுக்கு கூட ரச்சிதா எனக்கு பதில் அனுப்பியது இல்லை. அப்படி தான் தற்போதும் மெசேஜ் அனுப்பினேன். அதில் ஆபாசமாகவோ (அ) திட்டியோ மெசேஜ் அனுப்பவில்லை. இருப்பினும் அவர் போலீஸ் நிலையத்தில் நடந்து கொண்டதை பார்க்கும்போது இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன் என தினேஷ் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.