காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை(ஜனவரி-21) காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளிகளும் முழு பணி நாளாக செயல்படும் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.