நாடே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.

இதற்கிடையில் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடைபெறயிருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.