ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரும் ஆறுகள் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்நிலையில் மோயாற்றின் கரையோரம் முதலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் அச்சுமடைந்தனர்.

சிலர் முதலையை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த முதலையால் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.