தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அண்ணா நினைவு இல்லத்திலுள்ள உருவச் சிலைக்கு அமைச்சர் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் அண்ணா நினைவு இல்லத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அங்கிருக்கும் வருகை பதிவேட்டில் போட்ட கையெழுத்து தற்போது வைரலாகி வருகிறது. அதில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக காஞ்சி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம். கலைஞர் புகழ் ஓங்குக, தலைவர் வாழ்க என குறிப்பிட்டுள்ளார்.