மதுரை மாவட்டத்திலுள்ள மேலக்குயில்குடி பகுதியில் சிந்தாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சிந்தாமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சிந்தாமணி தனது கடைசி மகனான வேந்தர் என்பவரது பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேந்தர் அடிக்கடி தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.

நேற்று அதிகாலை மீண்டும் போதையில் வீட்டிற்கு வந்த வேந்தர் சிந்தாமணியிடம் தகராறு செய்து கோபத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிந்தாமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.