சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வித்யா(36) என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு டாஸ்க் பணம் செலுத்தி விளையாடி இலக்கை அடைந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து வித்யா பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 11 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பினார். ஆனால் அவருக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்து வித்யா மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.