திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு திருச்செல்வம் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் இரண்டு பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். அப்போது விற்பனையாளர் மது பாட்டில்களுக்கு 20 ரூபாய் சேர்த்து வாங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மது பிரியர் திருச்சி டாஸ்மாக் நிர்வாகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த விற்பனையாளரை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதற்கிடையே டாஸ்மாக் விற்பனையாளர் மது பிரியரிடம் கூடுதல் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது