விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் விவசாயியான நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பன் 5 பவுன் தங்க சங்கிலி, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் இருக்கும் நகை அடகு கடைக்கு சென்றார். அங்குள்ள கடையில் இருந்த சோகாராம், அவரது சகோதரர்களான சுகாராம், சம்பா ஆகியோரிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்து புதிதாக வேறு நகை செய்து தருமாறு கூறியுள்ளார்.

அவர்கள் நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு நாகப்பனுக்கு இதுவரை நகை செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து நாகப்பன் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.