திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்தூர் மேடு ராஜகோபாலபுரத்தில் விக்னேஸ்வரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூமாலை கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின் முன்பு மர்மமான முறையில் விக்னேஸ்வரன் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விக்னேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.