கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியநத்தம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த உளுந்தூர்பேட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்ததும் ஆகாஷ் சொந்த ஊர் செல்வதற்காக கடைவீதி வழியாக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றான். அப்போது ஆகாஷ் சேந்தநாடு நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏறிய போது நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் பின் சக்கரம் ஆகாஷின் இடது கால் மீது ஏறி இறங்கியது. இதனால் வழியில் அலறி துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.