திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமண மதத்தை சேர்ந்தவர். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் மோட்சம் அடைவதற்காக பொன்னூர் மலை அருகே இருக்கும் விசாகாச்சாரியார் தபோ நிலையத்திற்கு சென்றார்.

அங்கு கடந்த 21-ஆம் தேதி சல்லேகனை விரதத்தை தொடங்கியுள்ளார். அவர் ஆகாரம் தண்ணீர் இல்லாமல் கடுமையாக விரதம் இருந்து நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தபோ நிலைய வளாகத்தில் சமண மத முறைப்படி இறுதி சடங்கு நடைபெற்றது. பின்னர் அவரது உடல் தேங்காய்கள் மூலம் எரியூட்டப்பட்டது.