புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக்பிரபு என்பவர் நகை அடமான கடன், விவசாய கடன் போன்ற விவரங்களை தணிக்கை செய்த போது பல்வேறு வாடிக்கையாளர்களின் பெயரில் போலியான ஆவணங்களை தயார் செய்து 28 லட்சத்து 51 ஆயிரத்து 639 ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மேலாளராக வேலை பார்த்த சரவணன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதனையடுத்து சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.