செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  பாஜக பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராவதற்கு ஆதரவு கொடுக்கின்ற அத்தனை கட்சிகளோடும் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேணும்…. பிஜேபி ஒத்துக்கிறவர்கள்,

பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளையும்  நாங்கள் அழைப்பு விடுகின்றோம்.  வாருங்கள் இன்றைக்கு நாட்டிலே பத்தாண்டுகள் சிறப்பான ஆட்சி கொடுத்தது மட்டுமல்ல,  அடுத்து மிகப்பெரிய வாய்ப்பு இருக்கின்றது…  உறுதியாக வெற்றி பெறக்கூடிய கட்சி….

உறுதியாக மீண்டும் மோடி தான் பிரதமர் என்கின்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது…. இந்த நேரத்தில் பிரதமர் மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த,  தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் கூட பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுப்பதற்காக,  அத்தனை பேரையும் நாங்கள் கூட்டணிக்குள்ளாக வரவேற்கிறோம்

நாங்க தான் சொல்லிட்டோம்ல…  பிரதமர் மோடி அவர்களை ஆதரிக்கின்ற, எங்களுக்கு தேர்தலில் ஆதரவு கொடுக்கின்ற…. யாராக இருந்தாலும் நாங்கள் வாங்க என்று தான் சொல்வோம்.  ஊழலுக்கு எதிராக…. ஊழலுக்கு எதிரான ஒரே கட்சி பிஜேபி தான் என  நீங்க நினைச்சு இருக்கீங்க,  நன்றி…..

பத்து வருஷ காலம் ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை கொடுத்திருப்பது யார் ? பிஜேபி. ஊழல் இல்லாமல் ஒருத்தங்க கட்சி ஆரம்பிக்கிறாங்கன்னா….  அப்ப என்ன அர்த்தம் ? எங்க கட்சியை ஆதரிக்கிறாங்கன்னு அர்த்தம்…  மறைமுகமாக சொல்வதற்கு என்ன இருக்கு ? நேரடியாக மோடி அவர்களை ஆதரிப்பதற்கு எல்லாரும் வாங்கன்னு தான் சொல்றேன்…  இப்போ உங்களுக்கு சன் நியூஸுக்கு தலைப்பு செய்தி வேணுமாப்பா… நான் தான் எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கிறேன் என தெரிவித்தார்.