தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மெய்யனூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி சிவசங்கர் நேற்று கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். அந்த பேருந்து சேலம் திட்டக்குடி இடையே ஆத்தூர் வேப்பூர் தொழுதூர் வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது அரசு பேருந்து தடம் எண் 132 யூ இ திட்டக்குடி செந்தூர், வசிஷ்டபுரம், குழுமூர் ஜெயங்கொண்டம் பிரிவு வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

அந்த பேருந்து சேலத்தில் இருந்து காலை 4. 26 மணிக்கு புறப்பட்டு செந்துறைக்கு செல்லும். பின்னர் காலை 9.35 மணிக்கு செந்துறையில் இருந்து புறப்பட்டு ஆத்தூருக்கு செல்லும். இந்த நிகழ்ச்சியில் மேலாண் இயக்குனர் பொன்முடி, துணை மேலாளர் வணிகம் சேலம் பாண்டியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.