திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து சந்திராபுரம் அருகே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.