கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தட்டாங்குளம் பகுதியில் இருக்கும் திருமண வீட்டில் 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், விலை உயர்ந்த கைபேசிகள் திருடப்பட்டது. அதேபோல பாபு என்பவரது கடையில் மர்ம நபர்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடி சென்றனர்m இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை அடிப்படையில் மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திர குமார், அவரது மனைவி நிர்மலா, ஜெகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் மகேந்திர குமாரும் ஜெகனும் ஏற்கனவே தொடர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.