தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணா அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம் ஆகும். அதன்படி ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்தபோது, அதனை தூக்கி எறிந்தார். அதன்பின் மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்ற நிலையில், அந்த குழந்தையை விளையாட்டாக அடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொன்னார்.

இந்நிலையில் அவர் செவிலியர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கக்கூடிய அன்ஸ்டாப்பபிள் நிகழ்ச்சியில் விருந்தினராக ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் வந்திருந்தார். இதையடுத்து பவன் கல்யாண் உடனான உரையாடலில், நந்தமுரி பாலகிருஷ்ணா பழைய விபத்து ஒன்றை நினைவு கூர்ந்தார்.

அழகான நர்ஸை பார்த்ததும் “தினம்மா பலேக உண்டி அக்காடி நர்ஸ் (அந்த செவிலியர் ரொம்ப கவர்ச்சியாக)” என்ற உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை என பாலகிருஷ்ணா கூறினார். அதனைதொடர்ந்து செவிலியர்கள் பாலகிருஷ்ணா அந்நிகழ்ச்சியில் எங்களை அவமதித்ததாக குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை அடுத்து நந்தமுரி பாலகிருஷ்ணா, என் வார்த்தைகள் உங்களது மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என கூறியுள்ளார்.