நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது. இந்நிலையில் பதான் படத்தை தடைசெய்யவும், புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர், சும்மா குரைப்பவர்கள் மட்டும் தானே தவிர்த்து கடிக்கமாட்டார்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

இதுபற்றி பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது “இப்படத்தை எதிர்த்தவர்களால் பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு 30 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியவில்லை. காஷ்மீர் பைல்ஸ் என்ற பிரச்சார படத்தை எடுத்தனர். அந்த படத்தை பார்த்துட்டு சர்வதேச கலைஞர்கள் துப்பினர். பதான் படத்தை தடைசெய்ய நினைத்தவர்கள், பிரதமர் மோடியின் திரைப்படத்தை ரூ.30 கோடி வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. அவர்கள் குரைக்கிறவர்கள் தான் கடிக்க மாட்டார்கள்” என கூறினார்.