சஞ்சீவ் ஏராளமான படங்களில் தளபதி விஜய்யின் நண்பராக துணை வேடங்களில் நடித்து தன் சினிமா பயணத்தை தொடங்கினார். அவர் 2002ல் மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இதையடுத்து பல எதிர்மறை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சஞ்சீவ்க்கு, “திருமதி செல்வம்” (2007-2013) என்ற சீரியல் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில் சஞ்சீவ் கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடரின் தயாரிப்பாளரான நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதோடு பூவே பூச்சூடவா தொடரில் நடித்த ரேஷ்மா இந்த சீரியலில் நாயகியாக நடிக்கிறார். சஞ்சீவ் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டுமாக தொலைக்காட்சி சீரியலில் நடிக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கிழக்கு வாசல் தொடருக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.