ஜனநாயக சீர்திருத்தங்களுக்குரிய கூட்டமைப்பு எனும் நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள முதல்-மந்திரிகளின் சொத்து விபரங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. முதல்-மந்திரிகள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விபரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 28 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதல்-மந்திரிகளின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மிக ஏழ்மையான முதல் மந்திரியாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இருக்கிறார். அவரிடம் ரூபாய்.15 லட்சம் மட்டுமே சொத்துகள் இருக்கிறது.

இப்பட்டியலில் மீதம் உள்ள 29 முதல்-மந்திரிகளும் கோடீசுவரர்கள் ஆவர். மம்தா பானர்ஜிக்கு அடுத்து குறைவான சொத்துகள் உடையவர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இருவரும் தலா ரூ.1 கோடி வைத்திருக்கின்றனர். பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகிய இருவரின் சொத்து மதிப்பானது தலா ரூ.3 கோடி என எடுத்து காட்டப்பட்டுள்ளது.