மும்பையை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான லக்கி அலி சமீபத்தில் தன் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய அடிப்படையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பிரம்மன் எனும் வார்த்தை ஆபிரகாம் என்பதிலிருந்து உருவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. லக்கி அலியின் இப்பதிவு இந்து கடவுளாக சொல்லப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மாவை வணங்குபவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து பல இந்து அமைப்புகள், ஆன்மீகவாதிகள் லக்கி அலியின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் லக்கி அலி தன் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் “என் கடைசி பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதாக உணர்கிறேன். யாருக்கும் மனக் கசப்பையோ கோபத்தையோ ஏற்படுத்தும் நோக்கில் நான் அப்பதிவு வெளியிடப்படவில்லை. அவ்வாறு ஏற்படுத்தி இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் பதிவு பல இந்து சகோதர, சகோதரிகளை வருத்தத்தில் ஆழ்த்தும் என்பதை முன்பே நான் அறிந்திருந்ததால் மிகக் கவனமாக அதை எழுதி இருப்பேன். ஆகவே என்னுடைய பதிவு வருத்தத்தை ஏற்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” என லக்கி அலி குறிப்பிட்டுள்ளார்.