தன் சகோதரியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடையிலேயே கண்கலங்கிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல் விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில்  நடந்தது.

இந்த விழாவில் பங்கேற்ற சீமான், திருமண செய்ய போகும் ஜோடிகளை ஆசிர்வாதம் செய்தார். அதனை தொடர்ந்து மேடையில் இருவரையும் வாழ்த்தி பேச துவங்கியபோது திடீரென சீமான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் கலங்கினார். அப்போது அருகே நின்றுகொண்டிருந்த அவரது சகோதரி அன்பரசியும், உறவினர்களும் சீமானை அரவணைத்து ஆறுதல் கூறினர்.