தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுக சார்பாக ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். பிரிந்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில் தலையிடக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் ஆகும் என்று பேசினார்.

இந்நிலையில் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடக் கூடாதுதான். ஆனால் தோழமை என்ற வகையில் அதிமுகவுக்கு பாஜக கருத்து கூறக்கூடாது என சொல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முன்னதாக பொன்னையன், பிற மாநிலங்களில் கூட்டணி கட்சியை கவிழ்த்து பாஜக எப்படி ஆட்சியை பிடித்தார்கள் என எங்களுக்கு தெரியும். ஆகவே பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கிறோம் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.