இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம் செய்ய துடிக்கும் திமுக, காங்கிரஸ் கைக்கூலி கட்சி துரோகி எடப்பாடியே கழகத்தை விட்டு உடனே வெளியேறு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.