திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம், தரிசன வழிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்கனவே கோவில் நிர்வாகம் சார்பில் ரோப்கார், மின் இழுவை ரயிலில் செல்ல பக்தர்களுக்கு முன்னுரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு சில பக்தர்கள் முன்னுரிமை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.