திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

இதனையடுத்து படியில் நின்று பயணம் செய்த அமரேசன் எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.