கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி அருகே வ.உ.சி வீதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த அசோக்குமார் திடீரென வாழ்க்கையை வெறுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.