காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.கே புது தெருவில் பல நூற்றாண்டுகள் பழமையான கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும், துவாரபாலகர்கள், விநாயகர், முருகர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்று மகாபூர்ணா ஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பக்தர்கள் மூலவரை தரிசித்து சென்றனர்.