திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு மூலவர் நேற்று முன்தினம் முதல் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இந்த தங்க கவச தரிசனம் வருகிற 27-ஆம் தேதி வரையும், பின்னர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை தைலக்காப்பும் நடைபெறும். தைலக்காப்பு நடைபெறும் போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டு இருக்கும். முகம் மற்றும் பாதத்தை பக்தர்கள் தரிசித்து செல்லலாம் என கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.