விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சின்னபாப்பா(68). கடந்த வருடம் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவர் சின்னபாப்பாவிடம் 75 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார்.

இதுவரை பணத்தை திரும்ப கொடுக்காமல் நாராயணன் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சின்னபாப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.