திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் டாக்டர் ஜனகன் மற்றும் போலீசார் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது பணி செய்ய விடாமல் போலீசாரை தடுக்கும் வகையில் ராஜ்குமார் இரும்பு கம்பியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்த சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு உடந்தையாக இருந்த அருணாச்சலம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.