விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாசுதேவனுக்கு அனுசியா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய ஜோதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்தின் போது அனுசியாவின் பெற்றோர் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள், 6 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கூடுதல் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கி வருமாறு வாசுதேவன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு வாசுதேவனின் தந்தை மாயக்கண்ணன், தாய் காளியம்மாள், சகோதரர் சிலம்பரசன், அவரது மனைவி கல்பனா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து அனுசியா விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வாசுதேவன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.