கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிராஜ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சசிராஜ் 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சசிராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் சசிராஜுக்கு 4000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.