கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதனை அறிந்த பெற்றோர் சிறுமியை கண்டித்தனர். கடந்து சில நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சபரியின் வீட்டில் சிறுமி இருப்பது தெரியவந்தது. அவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சபரியை போலீசார் கைது செய்தனர்.