கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசுக்கார் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. கார் மோதிய வேகத்தில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததோடு, மேற்கூரை பெயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசனின் தாய் அமாவாசை(50), மனைவி தில்லை கலையரசி(24) அக்கா மகள் பிரவீனா(18) ஆகியோர் மீது விழுந்தது.

அவர்கள் அலறி சத்தம் போட்டதால் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டனர். அவர்கள் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காருக்குள் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.