சென்னை மாவட்டத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் 5 மின்கம்பங்கள் சேதம் அடைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தை சீரமைத்து மின்வினியோகம் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.