நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்பிக்கை இல்லா தீர்மானம் –  அதே சமயத்தில் கருவம்… அதே சமயத்தில் நம்பிக்கையின்மை எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது. இவர்கள் மக்களின் நம்பிக்கை பார்க்க முடியாதவர்கள். இது ஒரு சத்துருமுக அப்ரோச்.   இதற்காக தேசம் என்ன செய்ய முடியும் ?

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் பழைய சிந்தனைகள் உடையவர்கள். நான் அந்த எண்ணங்களோடு ஒத்துப் போவதில்லை. நல்லது நடக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நல்ல உடை அணிவார்கள். அப்போது ஒரு கருப்பு பொட்டு ஒன்று வைத்துக் கொள்வார்கள். இன்று நாடு முழுவதும் நல்லது நடக்கிறது. நான்கு புறமும் வளர்ச்சி ஏற்படுகிறது.

நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு கருப்பு பொட்டு வைப்பது போல், ஒரு பொட்டை வைத்திருக்கிறீர்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள்.

இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற இந்த கவலைகள் நீங்கிருக்கும். மனதை சற்று எளிமையாக இருக்கும். அவர்களுடைய முக்கியமான குரல் என்ன ? ”மோடி” உங்களுடைய புதைகுழி தோண்டப்படும் என்பதாகும். ”மோடி”   உங்களுடைய புதைகுழி தோண்டப்படும். இதுதான் இவர்களுடைய பிடித்தமான ஒரு முழக்கம். ஆனால் என்னை பொருத்தவரையில்…  இவர்களுடைய இந்த திட்டத்தில்…  இந்த கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் எனக்கு டானிக் போல் ஆகிவிடுகிறது. இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ? ஏன் இவ்வாறு நடக்கிறது ? அதற்கான ரகசியத்தை நான் இன்று அவையிலே சொல்ல விரும்புகின்றேன் என தெரிவித்தார்.