செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கொடநாடு கொலை – கொள்ளை சம்பந்தமாக விரிவான நடவடிக்கை எடுத்து, யார் குற்றவாளிகள் என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  சயான் சொல்லியிருக்கின்ற பழனிச்சாமியா ? யார் என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும் என்பதை முக்கியமாக நிலை நிறுத்தி நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றது.

திருச்சி திருப்புமுனையாக கடல் போல கூடிய கூட்டம். கடல் அலை என திரண்டு எழுந்த தொண்டர்களும் – மக்களும்… இதெல்லாம் பார்த்து பொறுக்க முடியாத பழனிச்சாமி, இன்னைக்கு அந்த திருச்சி மாநாட்டிற்கு எதிர்ப்பா ஒரு மாநாடு நடத்துவோம் என்று சொல்லி,  சினிமா தியேட்டர் வரைக்கும் போய்… சினிமா தியேட்டர்ல டிக்கெட்   எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டிட்டு வர நிலைமைக்கு போய் இருக்கின்ற நிலைமையை நாம் பார்க்க முடிகிறது.

ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் August 20-ம் தேதி  நாங்க முன்னமே திட்டமிட்டபடி எங்களது மாவட்ட கழக செயலாளர்கள் –  நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் நாடாளுமன்றம் சம்பந்தமாக மிக முக்கியமான செய்திகளை அறிவிக்க இருக்கிறார்கள்.  மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர் ? எங்களது அணி முதல் அணி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, முதலமைச்சராக்கிய ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் தான் அமையும், அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்.  பழனிச்சாமிக்கு இங்க வேலையே கிடையாது,  பாருங்க என்ன நடக்கப் போகிறது என்று…

ஓபிஎஸ் அவர்களிடம் கூட்டணிக்கு பல கட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணியை  கூட ஓபிஎஸ் அன்றைய தினம் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்து எந்த மூவ்மெண்ட் ? என்ன பண்ண போகிறோம் ? என்ன அறிவிக்க போறோம் ? என்ன நடக்கப் போகிறது என்பதை சொல்லப் போகிறார் என தெரிவித்தார்.