கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி சுட்ட வடைகள் தேர்தல் முடிந்த உடனே ஊசிப்  போய்விட்டன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,  பாஜக மற்றும் அதிமுகவினர் செய்யாத திட்டங்களை செய்ததாக கூறி சமூக ஊடகங்களில் பொய்யாக பரப்பி வருவதாகவும்,  திமுகவின் திட்டங்களை திமுகவினரே நடமாடும் ஊடகமாக மாறி மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அதிமுக பாஜகவினர் எதையுமே செய்யாமல் எல்லாத்தையும்  செஞ்ச மாதிரி விளம்பரம் செய்து கொள்வார்கள். நாம நம்மளுடைய சாதனைகளை மட்டும் பேசினாலே போதும். முன்பெல்லாம் டீக்கடைகளில்,  சலூன்களில்  பேசப்பட்ட அரசியல் இப்போது சமூக ஊடகங்களில்  பேசப்படுது என தெரிவித்தார்.