பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் 3,51,724 மாணவர்கள் LKG, UKG படித்து வருகின்றனர்.

இந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச  சீருடை வழங்கப்பட உள்ளது. இந்த இலவச சீருடை திட்டத்திற்காக  மொத்தம் 21.10 கோடிரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.