அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே. வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் அந்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசின் கடிதங்களை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, ஒப்புகைச் சீட்டு வழங்கியதற்கான விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.