உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு தற்போது அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரரை கொலை செய்தவர்களை நாங்கள் பழித்தீர்க்காமல் விடமாட்டோம் என பகிரங்கமாக எச்சரிக்கை ‌ விடுத்துள்ளனர்.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ ஊடகப் பிரிவான சகாப் வலைதளத்தில் இது தொடர்பாக 7 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் எங்கள் முஸ்லிம் சகோதரர்களை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பழி தீர்க்காமல் விட மாட்டோம். அமெரிக்க வெள்ளை மாளிகையாக இருந்தாலும் சரி, டெல்லி பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் ராணுவ தலைமையகமாக இருந்தாலும் சரி நாங்கள் நினைத்ததை செய்து காட்டுவோம். எங்கள் நபியின் மாண்பை காக்க எங்கள் குழந்தைகளின் உடலில் கூட வெடிகுண்டு வைப்போம். நாங்கள் கண்டிப்பாக திரும்ப ‌ வருவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.