தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில் உறுதி ஏற்போம்.

அம்பேத்கரின் சிலை முன்பு அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை சமத்துவ நாள் உறுதி மொழியாக ஏற்போம்  என்று கூறியுள்ளார். மேலும் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் “ஜனநாயகம் காப்போம்” என்ற தலைப்பில் அணிவகுப்பு நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.