தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ் கேட்டிருந்த 45 இடங்களிலும் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் சீருடை அணி வகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சட்டம்  பாதிக்கப்படும் என்று இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.