லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சி வேண்டும் என்று சென்னையில் உயர் நீதிமன்றத்தில் பட குழு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி இன்று ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதிகாலை காட்சிக்கு தடை விதித்ததோடு 7 மணி காட்சி வேண்டுமானால் நீங்கள் தமிழக அரசை அணுகி பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதோடு அந்த உத்தரவில்,

இதில் திரையரங்க  உரிமையாளர்களுடைய நிலைப்பாடு என்ன ? என்பது குறித்து அவர்கள் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் ஏற்கனவே தமிழக அரசு வழங்கிருக்கக்கூடிய 5 காட்சிகளே போதுமானது.  காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிக்குள்ளாக ஐந்து காட்சிகளையும் திரையிடுவதற்கு நேரம் சரியாக இருக்கும் எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை காட்சி சிறப்பு காட்சி 7 மணி காட்சிகள் எல்லாம் வந்தால் திரையரங்கினுடைய  உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் ஏற்படும்.   அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிய கூடிய நிலையில் பாதுகாப்பிற்காக சிறப்பாக 50க்கும் மேற்பட்ட காவலர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். இவ்வாறான சிக்கலுக்கு மத்தியில் அதிகாலை காட்சிகள் திரையிடுவது திரையரங்கிற்கும்,  திரையரங்க உரிமையாளருக்கும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். ஆகவே 4 மணி மற்றும் 7 காட்சிகள் தேவையில்லை என்று பதில் மனுவில் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.