சென்னை உயர்நீதிமன்றத்தில் லியோ அதிகாலை சிறப்பு காட்சிக்கான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் பதில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், லியோ அதிகாலை 4 மணி காட்சி 7 மணி காட்சிகள் தேவையற்றது என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் காலை 9 மணி முதல் 5 காட்சிகள் திரையிட நேரம் உள்ளது என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.