லியோ படத்திற்கான மலேசியா விநியோகஸ்தர் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் ஈட்ட வேண்டும் என்பதற்காக தீவிரமான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பட குழு ஈடுபட்டு வருகிறது. படத்தை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்ட படக்குழு  குறிப்பாக, மலேசியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக அளவிலான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் லியோ படத்திற்கான விநியோகஸ்தர் பொறுப்பை ஏற்றவர் மாலிக். இவர்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைதுக்கான காரணம் குறித்து தேடிய போது அவர் பணம் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.